என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நில அளவையர் கைது
நீங்கள் தேடியது "நில அளவையர் கைது"
வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 40). இவர் கடந்த 2006-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரி இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பார்த்த வாழப்பாடி நில அளவையர் சவுந்தரராஜன் (30) என்பவர், இந்திராணியை அழைத்தார். அவரிடம் உரிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த, நில அளவையர் சவுந்தரராஜன், நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு இந்திராணி அவ்வளவு தொகை தர இயலாது என்று தெரிவித்தார். பின்னர் ரூ.15 ஆயிரம் தருவதாக தெரிவித்தார்.
எனினும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத இந்திராணி, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் துணை சூப்பிரண்டு சபரிராஜன், இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் இந்திராணியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.
வாழப்பாடி பஸ்நிலையம் எதிரே உள்ள பூக்கடை சந்துக்குள் இந்திராணி, நிலஅளவையர் சவுந்திரராஜனிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக சவுந்திரராஜனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை வாழப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் வாழப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 40). இவர் கடந்த 2006-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரி இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பார்த்த வாழப்பாடி நில அளவையர் சவுந்தரராஜன் (30) என்பவர், இந்திராணியை அழைத்தார். அவரிடம் உரிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த, நில அளவையர் சவுந்தரராஜன், நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு இந்திராணி அவ்வளவு தொகை தர இயலாது என்று தெரிவித்தார். பின்னர் ரூ.15 ஆயிரம் தருவதாக தெரிவித்தார்.
எனினும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத இந்திராணி, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் துணை சூப்பிரண்டு சபரிராஜன், இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் இந்திராணியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.
வாழப்பாடி பஸ்நிலையம் எதிரே உள்ள பூக்கடை சந்துக்குள் இந்திராணி, நிலஅளவையர் சவுந்திரராஜனிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக சவுந்திரராஜனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை வாழப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் வாழப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியகுளத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.
அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.
அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X